Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ சாலை மையத்தடுப்பில் ஏறி விபத்தில் சிக்கிய அரசு பஸ்

சாலை மையத்தடுப்பில் ஏறி விபத்தில் சிக்கிய அரசு பஸ்

சாலை மையத்தடுப்பில் ஏறி விபத்தில் சிக்கிய அரசு பஸ்

சாலை மையத்தடுப்பில் ஏறி விபத்தில் சிக்கிய அரசு பஸ்

ADDED : அக் 14, 2025 12:38 AM


Google News
தாம்பரம், தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின், விழுப்புரம் பணிமனையை சேர்ந்த பேருந்து, 15 பயணியருடன், நேற்று காலை மாதவரம் டிப்போவில் இருந்து, சென்னை புறவழிச்சாலை வழியாக, விழுப்புரம் நோக்கி சென்றது.

பேருந்தை சுந்தர்ராஜ், 50, என்பவர் ஓட்டினார். பாலாஜி, 26, என்பவர் நடத்துநராக பணியாற்றினார். மேற்கு தாம்பரம், 'ஸ்டெப் ஸ்டோன்' குடியிருப்பு அருகே வந்த போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலை மையத்தடுப்பில் ஏறி விபத்தில் சிக்கியது.

இந்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக பயணியர் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. விபத்து குறித்து, குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us