/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் மேலும் 6 இடங்களில் திறக்க உத்தரவு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் மேலும் 6 இடங்களில் திறக்க உத்தரவு
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் மேலும் 6 இடங்களில் திறக்க உத்தரவு
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் மேலும் 6 இடங்களில் திறக்க உத்தரவு
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் மேலும் 6 இடங்களில் திறக்க உத்தரவு
ADDED : செப் 26, 2025 03:37 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், சொர்ணவாரி பருவத்திற்கு கூடுதலாக ஆறு இடங்களில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க, கலெக்டர் சினேகா உத்தரவிட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், சொர்ணவாரி பருவத்தில், 35,068 ஏக்கருக்கு நெல் நடவு செய்யப்பட்டது.
தற்போது, ஒரு சில இடங்களில் அறுவடை நடைபெற்று வருகிறது.
மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ், சொர்ணவாரி பருவத்தில் நெல் கொள்முதல் செய்ய, அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்கவும், விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யவும், தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்டத்தில், 46 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க அனுமதி வழங்கி, கடந்த ஆக., 28ம் தேதியும், மூன்றாம் கட்டமாக, கூடுதலாக 19 இடங்களில், தற்காலிகமாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கவும், கலெக்டர் சினேகா உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து திருக்கழுக்குன்றம், மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், நெல் அறுவடைக்கு தயாராக உள்ளதாகவும், மழையில் நெற்பயிர் பாதிக்கப்படுவதாகவும் கூறி, கூடுதலாக நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டுமென கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர்.
அதன்படி திருக்கழுக்குன்றம், மதுராந்தகம் பகுதியில், கூடுதலாக ஆறு இடங்களில், தற்காலிகமாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க, கலெக்டர் சினேகா நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.