/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 276 மாநகராட்சி ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்ய எதிர்பார்ப்பு 276 மாநகராட்சி ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்ய எதிர்பார்ப்பு
276 மாநகராட்சி ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்ய எதிர்பார்ப்பு
276 மாநகராட்சி ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்ய எதிர்பார்ப்பு
276 மாநகராட்சி ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்ய எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 13, 2024 12:20 AM
சென்னை, சென்னை மாநகராட்சி, 2011ம் ஆண்டு விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது, ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சிகளில் பணிபுரிந்த, 908 கடைநிலை ஊழியர்கள், மணலி, மாதவரம், வளசரவாக்கம், ஆலந்துார், பெருங்குடி, சோழிங்கநல்லுார் மண்டலங்களில் சேர்ந்தனர்.
இவர்களில் 288 பேரை, 2013ல் குடிநீர் வாரியம் பணியில் சேர்த்தது. மீதமுள்ளவர்கள், சென்னை மாநகராட்சியில் ஊழியர்களாக பணிபுரிந்தனர்.
விரிவாக்கத்திற்கு முன்பே, 10 முதல் 20 ஆண்டுகள் வரை பணிபுரிந்ததால், பணி நிரந்தரம்கேட்டு, குடிநீர் வாரியத்தில் உள்ள 288 பேர் மற்றும் மாநகராட்சியில் உள்ள 27 பேர், நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி, 2019ம் ஆண்டு, இவர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். 593 பேரில், மீதமுள்ள 276 பேர், பணி நிரந்தரம் கேட்டு, 2020ல் வழக்கு தொடுத்தனர். 276 பேரையும் நிரந்தரம் செய்ய வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் 2023 நவ., மாதம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அவர்கள் கூறியதாவது:
பணி நிரந்தரம் கிடைக்கும் என, 25 முதல் 35 ஆண்டுகள் வரை தினக்கூலியில் பணிபுரிகிறோம். பிள்ளைகள் படிப்பு, திருமணம் உள்ளிட்டவைக்கு, இதில் கிடைக்கும் ஊதியத்தை நம்பி இருக்கிறோம். பென்சன் கிடையாது.
இருந்தாலும் பணிக்காலத்தை பொறுத்து ஓரளவு நிதி கிடைக்கும். தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வந்தும், பணி நிரந்தரம் செய்யாமல், மேல் முறையீடு செய்ய உள்ளதாக அறிகிறோம். 276 பேரையும் நிரந்தரம் செய்ய சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.