ADDED : ஜூலை 26, 2024 12:13 AM
சென்னை, சென்னையில் விமான நிலையத்தில் இருந்து அந்தமானுக்கு, 189 பயணியருடன் ஆகாஷா ஏர் பயணியர் விமானம், நேற்று காலை 7:45 மணிக்கு புறப்படத் தயாரானது. அந்தமானில் மோசமான வானிலை நிலவியதால், தாமதமாக காலை 11:00 மணிக்கு புறப்பட்டது. அந்தமான் வான்வெளியை நெருங்கும் போது, சூறைக்காற்று பலமாக வீசியது, வானிலையும் மோசமாக இருந்தது.
இதனால் அங்கு தரையிறங்க முடியாமல், மீண்டும் நேற்று மாலையில் சென்னைக்கு திரும்பியது.