/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மச்சக்கார முருகன் கோவிலில் வரும் 29ல் 108 பால்குட விழா மச்சக்கார முருகன் கோவிலில் வரும் 29ல் 108 பால்குட விழா
மச்சக்கார முருகன் கோவிலில் வரும் 29ல் 108 பால்குட விழா
மச்சக்கார முருகன் கோவிலில் வரும் 29ல் 108 பால்குட விழா
மச்சக்கார முருகன் கோவிலில் வரும் 29ல் 108 பால்குட விழா
ADDED : ஜூலை 26, 2024 12:13 AM
வானகரம், சென்னை, வானகரம் மேட்டுக்குப்பத்தில், மச்சக்கார சுவாமிநாத பாலமுருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் உள்ள மூலவர் முருகபெருமானின் வலது கன்னத்தில், சிவப்பு நிறத்தில் மச்சம் உள்ளது.
அதனால் இவரை, 'மச்சக்கார பாலமுருகன்' என பக்தர்கள் அழைக்கின்றனர். இத்தல முருகனை வணங்கினால், தடைபட்டு வந்த திருமணம் விரைவில் கைகூடும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இக்கோவிலில் சக்கர விநாயகர், வானதீஸ்வரர், ஸ்வர்ணா கர்ஷண பைரவர், யோக ஆஞ்சநேயர், சாய்பாபா, விஷ்ணு துர்க்கை சன்னிதிகள் உள்ளன.
மேலும், கடந்த 2018ம் ஆண்டு, 7 அடி உயரத்தில் ஆதிசேஷன் குடையாக நிற்கும் வடிவில், ஆதிசேஷ நாராயண பெருமாள் சன்னிதி நிர்மாணிக்கப்பட்டது.
இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடிக் கிருத்திகைக்கு 108 பால் குடம் விழா நடைபெறுவது வாடிக்கை. இந்த ஆண்டு, வரும் 29ம் தேதி, 12:00 மணியளவில், 108 பால்குட விழா நடைபெற உள்ளது.