ADDED : ஜூலை 26, 2024 12:15 AM
அண்ணா நகர், அண்ணாநகர் கிழக்கில் வசிப்பவர், சினிமா நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன், 62.
இவர், மதுராந்தகத்தைச் சேர்ந்த சரவணன், 38, என்பவரிடம், 6 லட்சம் ரூபாய் வாங்கியதாகக் கூறப்படுகிறது. பணத்தைக் கேட்க நேற்று, அண்ணா நகரில் உள்ள சீனிவாசன் வீட்டிற்கு சரவணன் வந்துள்ளார்.
அங்கு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, சீனிவாசன் மொபைல் போனில் போலீசில் புகார் அளித்தார். அண்ணாநகர் போலீசார், நீதிமன்றத்தை அணுகும்படி அறிவுறுத்தி, சரவணனை அனுப்பி வைத்தனர்.