Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வீடு புகுந்து 7.5 சவரன் ரூ.1.50 லட்சம் திருட்டு

வீடு புகுந்து 7.5 சவரன் ரூ.1.50 லட்சம் திருட்டு

வீடு புகுந்து 7.5 சவரன் ரூ.1.50 லட்சம் திருட்டு

வீடு புகுந்து 7.5 சவரன் ரூ.1.50 லட்சம் திருட்டு

ADDED : அக் 14, 2025 01:15 AM


Google News
பெரும்பாக்கம், பெரும்பாக்கம், எழில் நகரைச் சேர்ந்தவர் முருகன், 52; தனியார் அடுக்குமாடி குடியிருப்பு காவலாளி. இவரின் மகன் விஷ்வராஜனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, நேற்று மாலை சிந்தாதிரிப்பேட்டையில் நடந்தது.

அதில் பங்கேற்ற முருகன், நிகழ்ச்சி முடிந்து இரவு 12:00 மணிக்கு வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

வீட்டினுள் சென்று பார்த்தபோது, பீரோவை உடைத்து, 7.5 சவரன் நகைகள் மற்றும் 1.50 லட்சம் ரூபாய் திருடப்பட்டிருந்தது. இது குறித்து பெரும்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us