Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ நிதி நிறுவனம் நடத்தி மோசடி காங்., நிர்வாகி, மனைவி கைது

 நிதி நிறுவனம் நடத்தி மோசடி காங்., நிர்வாகி, மனைவி கைது

 நிதி நிறுவனம் நடத்தி மோசடி காங்., நிர்வாகி, மனைவி கைது

 நிதி நிறுவனம் நடத்தி மோசடி காங்., நிர்வாகி, மனைவி கைது

ADDED : டிச 01, 2025 01:24 AM


Google News
Latest Tamil News
கோயம்பேடு: நிதி நிறுவனம் நடத்தி, பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் காங்., நிர்வாகி மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்டனர்.

போரூர் அடுத்த காரம்பாக்கம், பொன்னியம்மன் நகரைச் சேர்ந்தவர் தளபதி பாஸ்கர், 52. இவர் காங்., மாநில பொது செயலராக இருந்தார். இவரது மனைவி தேன்மொழி.

இவர்கள் போரூர், வளசரவாக்க ம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நிதி நிறுவனம் நடத்தி வந்தனர். அதில், பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதால், கடந்த மாதம் விஷம் குடித்து இருவரும் தற்கொலைக்கு முயன்றனர்.

குடும்பத்தினர் இருவரையும் மீட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

சிகிச்சை பெற்று இருவரும் வீடு திரும்பிய நிலையில், பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்க துவங்கினர். போலீசார் தேடுவதை அறிந்த தளபதி பாஸ்கர் மற்றும் தேன்மொழி தலை மறைவாகினர்.

இந்நிலையில், தளபதி பாஸ்கர் கோயம்பேடில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கி இருப்பதாக வந்த தகவலையடுத்து, பணம் கொடுத்து ஏமாந்த நுாற்றுக்கும் மேற்பட்டோர் ஹோட்டலை நேற்று முற்றுகையிட்டு, தளபதி பாஸ்கரை வெளியே வருமாறு கூறியுள்ளனர்.

தகவலறிந்த கோயம்பேடு போலீசார், அங்கு வந்து பேச்சு நடத்தினர். மேலும், மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

மத்திய குற்றப்பிரிவு போலீசார், தளபதி பாஸ்கர் மற்றும் அவரது மனைவி தேன்மொழியை கைது செய்து, விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us