Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கோபாலபுரம் தரைப்பாலம் சீரமைக்கும் பணி துவக்கம்

 கோபாலபுரம் தரைப்பாலம் சீரமைக்கும் பணி துவக்கம்

 கோபாலபுரம் தரைப்பாலம் சீரமைக்கும் பணி துவக்கம்

 கோபாலபுரம் தரைப்பாலம் சீரமைக்கும் பணி துவக்கம்

ADDED : டிச 01, 2025 01:23 AM


Google News
Latest Tamil News
ஆவடி: நம் நாளிதழ் செய்தி எதிரொலியால், சேதமடைந்த தரைப்பாலத்தை சீரமைக்கும் பணி நேற்று துவங்கியது.

ஆவடி அடுத்த பட்டாபிராம், கோபாலபுரம் பிரதான சாலை, பத்மாவதி கார்டன் அருகே எட்டு ஆண்டுகளுக்கு முன் சேக்காடு - கோபாலபுரம் பகுதியை இணைக்கும் வகையில், தரைப்பாலம் அமைக்கப்பட்டது.

பட்டாபிராம், தண்டுரை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் கூட்ட நெரிசலின்றி செல்ல, இந்த தரைப்பாலத்தைபயன்படுத்துகின்றனர்.

சில தினங்களுக்கு முன், அதிக பாரம் ஏற்றிச்சென்ற கனரக லாரியின பளு தாங்காமல், தரைப்பாலத்தின் நடுவே பள்ளம் விழுந்தது. தொடர்ந்து, கார் ஒன்றும் பள்ளத்தில் சிக்கியது. அடிக்கடி வாகனங்கள் சிக்குவதால் பீதி ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் புலம்பினர். இதுகுறித்து நம் நாளிதழில் நேற்று படத்துடன் செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக, சாலையின் இருபுறமும் தடுப்பு அமைத்து, தரைப்பாலம் இடிக்கும் பணி நேற்று துவங்கியது. சீரமைப்பு பணிகள் முடியும் வரை இவ்வழியில் போக்குவரத்து தடை செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக ஆர்வலர் ஸ்ரீதர், 68, கூறுகையில், ''தரைப்பாலம் உடைக்கப்பட்டு வருவதால், கோபாலபுரம் மக்கள் தண்டுரை வழியாக 3 கி.மீ., சுற்றி, ஆவடி பகுதிகளுக்கு செல்ல வேண்டும்.

இப்பிரச்னையை தீர்க்க பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். நிரந்தர தீர்வாக பட்டாபிராமில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும்,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us