ADDED : அக் 17, 2025 11:19 PM
ஆவடி: ஆவடி, கவரப்பாளையத்தைச் சேர்ந்தவர் காஜா மொய்தீன், 52; இடியாப்பம் வியாபாரி.
அம்பத்துாரில் உள்ள கடைகளுக்கு, இடியாப்பம் சப்ளை செய்து விட்டு, நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, திடீரென சாலையில் மயங்கி விழுந்துள்ளார். அங்கிருந்தவர் அவரை அருகில் உள்ள மருத்துவ மனையில் சேர்த்தனர்.
அங்கு அவர் உயிரிழந்தது தெரிந்தது. அம்பத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


