Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மூடிய 'அம்மா' குடிநீர் மையம் திறந்தால் பயனாக இருக்கும்

மூடிய 'அம்மா' குடிநீர் மையம் திறந்தால் பயனாக இருக்கும்

மூடிய 'அம்மா' குடிநீர் மையம் திறந்தால் பயனாக இருக்கும்

மூடிய 'அம்மா' குடிநீர் மையம் திறந்தால் பயனாக இருக்கும்

ADDED : ஜூன் 16, 2025 03:01 AM


Google News
Latest Tamil News
வளசரவாக்கம்:சென்னை மாநகராட்சி பகுதியில் ஏழை மக்களுக்காக, சுத்திகரிக்கப்பட்ட கேன் குடிநீர் வழங்கும் திட்டத்தை, 2016ம் ஆண்டு, அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா துவக்கி வைத்தார்.

இத்திட்டத்தின் கீழ் ஒரு மணி நேரத்தில் 3,000 லிட்டர் வரை குடிநீர் தயாரிக்கப்பட்டது. ஒரு நபருக்கு, தினமும் 20 லிட்டர் வீதம், 4 லட்சம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகிக்கப்பட்டது. ஆட்சி மாற்றத்திற்குப் பின், பல்வேறு இடங்களில் உள்ள 'அம்மா' குடிநீர் மையங்கள் மூடப்பட்ட நிலையில் உள்ளன.

இதில், வளசரவாக்கம் மண்டலம், 151வது வார்டு சின்ன போரூர் பள்ளி தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அம்மா குடிநீர் மையங்கள், ஓராண்டிற்கும் மேலாக மூடப்பட்டுள்ளன. இதை முறையாக பராமரித்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால், பகுதிவாசிகளுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us