Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ போலீஸ் ஸ்டேஷனுக்கு மிரட்டல் விடுத்தவர் கைது

 போலீஸ் ஸ்டேஷனுக்கு மிரட்டல் விடுத்தவர் கைது

 போலீஸ் ஸ்டேஷனுக்கு மிரட்டல் விடுத்தவர் கைது

 போலீஸ் ஸ்டேஷனுக்கு மிரட்டல் விடுத்தவர் கைது

ADDED : டிச 01, 2025 01:21 AM


Google News
Latest Tamil News
மதுரவாயல்: மதுரவாயல் காவல் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை, போலீசார் கைது செய்தனர்.

மதுரவாயல் காவல் நிலையத்திற்கு நேற்று முன்தினம் மர்ம நபர் மிரட்டல் விடுத்தார். மிரட்டல் புரளி என தெரியவந்தது.

இதையடுத்து, மொபைல் போன் எண்ணை வைத்து போலீசார் விசாரித்ததில், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியைச் சேர்ந்த சுமதி என்பவர் பெயரில் இருப்பது தெரியவந்தது. அங்கு சென்ற போலீசார் சுமதியிடம் விசாரித்தனர். இதில், அவரது கணவர் பூபதி, 43, என்பவர் மிரட்டல் விடுத்ததும், சென்னை நொளம்பூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு அருகே, துணிகளை அயன் செய்யும் தொழில் செய்து வந்ததும் தெரியவந்தது.

இவர் கடந்த அக்., 12ம் தேதி, மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி பூங்கா மற்றும் முருகன் கோவிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுத்த வழக்கில், ஏற்கனவே போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

ஜாமினில் வெளியே வந்த அவர், தன்னை கைது செய்த மதுரவாயல் போலீசாரை பழிவாங்க, காவல் நிலையத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது.அவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us