Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...

ADDED : செப் 25, 2025 12:32 AM


Google News
Latest Tamil News
பண மோசடி: தலைமறைவு தம்பதி கைது

புளியந்தோப்பு: ஓட்டேரி, பிரிக்ளின் சாலையைச் சேர்ந்தவர்கள் ராமசாமி, 57 மற்றும் அவரது மனைவி ரோஸி, 47. கடந்த 2017ம் ஆண்டு பதியப்பட்ட பணமோசடி வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராகாத தம்பதிக்கு, கடந்த 16ம் தேதி பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து புளியந்தோப்பு போலீசார் தம்பதியை நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

சிறுவனை கொன்ற

மேலும் இருவர் கைது

கொளத்துார்: கொளத்துார், முருகன் நகரைச் சேர்ந்தவர் வீரமணி, 47; பேருந்து நடத்துநர். இவரது மகன் ஹர்ஷவர்த்தன், 16. கடந்த 18ம் தேதி மாலை, முன்விரோதம் காரணமாக 10 பேர் கும்பல் சரமாரியாக தாக்கியதில், ஹர்ஷவர்தன் உயிரிழந்தார். இது குறித்து விசாரித்த ராஜமங்கலம் போலீசார், ஏற்கனவே ஆறு பேரை கைது செய்த நிலையில், வில்லிவாக்கத்தைச் சேர்ந்த கதிர்வேல், 22 மற்றும் 17 வயது சிறுவனை நேற்று கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us