Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கோவையில் மூன்று நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு; விவசாயிகள் செய்ய வேண்டியதென்ன?

கோவையில் மூன்று நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு; விவசாயிகள் செய்ய வேண்டியதென்ன?

கோவையில் மூன்று நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு; விவசாயிகள் செய்ய வேண்டியதென்ன?

கோவையில் மூன்று நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு; விவசாயிகள் செய்ய வேண்டியதென்ன?

ADDED : ஜூன் 26, 2024 10:45 PM


Google News
கோவை : கோவையில் அடுத்த மூன்று நாட்களுக்கு, மிதமான மழை எதிர்பார்க்கப்படுகிறது என்று, தமிழ்நாடு வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

அதன்படி, இன்று 44 மி.மீ., நாளை 26 மி.மீ., 29ம் தேதி 4 மி.மீ., மழை பதிவாக வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30-.33 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 20-.23 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகும்.

காலை நேர காற்றின் ஈரப்பதம் 90 சதவீதமாகவும், மாலை நேர காற்றின் ஈரப்பதம் 70 சதவீதமாகவும் இருக்கும். சராசரியாக காற்று மணிக்கு, 16-.22 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும். பெரும்பாலும் தென்மேற்கு திசையில் இருந்து வீசக்கூடும்.

வரும் 3 நாட்களுக்கு, மேற்கு மண்டலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மிதமான மழை எதிர்பார்க்கப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில், கனமழை எதிர்பார்க்கப்படுகிறது.

விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்


எதிர்பார்க்கப்படும் மழையை கருத்தில் கொண்டு, மானாவாரி சோளத்துக்கு தழைச்சத்து உரமிடலாம். தற்போது நிலவும் வானிலையால், மானாவாரி நிலக்கடலையில் செர்கோஸ்போரா இலைப்புள்ளி நோய் வர வாய்ப்புள்ளது.

எனவே, விவசாயிகள் இதை கண்காணிக்க வேண்டும். தென்மேற்குப் பருவமழை துவங்கி இருப்பதால், மரம் நடவு செய்ய விரும்பும் விவசாயிகள், ஆயத்தப் பணிகளை மேற்கொள்ளலாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us