ADDED : ஜூன் 26, 2024 10:44 PM
கோவை : துாய்மை பணியாளர்களுக்கு, ரூ.25 ஆயிரம் மதிப்பிலான உபகரணங்கள் வழங்கப்பட்டன.
ரேஸ்கோர்ஸ் குடியிருப்போர் அசோசியேஷன் சார்பில், ரூ.25 ஆயிரம் மதிப்பிலான குப்பை மற்றும் மறுசுழற்சி குப்பைகளை தனித்தனியே பிரித்து வழங்கும், வகையில் 50 குப்பைக்கூடைகள் வழங்கப்பட்டன.
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் அவற்றை வழங்கினார். ரேஸ்கோர்ஸ் அசோசியேஷன் நிர்வாகிகள் காமினி, திவ்யா, உதவி கமிஷனர் செந்தில்குமரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.