Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நாளை முதல் 30ம் தேதி வரை கோவைக்கு இரு ரயில்கள் வராது

நாளை முதல் 30ம் தேதி வரை கோவைக்கு இரு ரயில்கள் வராது

நாளை முதல் 30ம் தேதி வரை கோவைக்கு இரு ரயில்கள் வராது

நாளை முதல் 30ம் தேதி வரை கோவைக்கு இரு ரயில்கள் வராது

ADDED : ஜூலை 14, 2024 11:01 PM


Google News
கோவை:தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக, மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதால், நாளை முதல் வரும் 30ம் தேதி வரை, ஆலப்புழா மற்றும் எர்ணாகுளம் ரயில்கள், கோவை ஜங்ஷனில் நின்று செல்லாது என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, சேலம் கோட்ட ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை:

சேலம் கோட்டத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடப்பதால், இரு ரயில் சேவைகள் போத்தனுார், இருகூர் வழியாக இயக்கப்படும். இந்த ரயில்கள், கோவை ஜங்ஷனுக்கு வராது.

வரும் 16, 18, 20, 23, 25, 27, 30ம் தேதிகளில் கோவை ஜங்ஷன் வழியாக இயக்கப்பட இருந்த ஆலப்புழா- தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில்(எண் : 13352), போத்தனூர், இருகூர் வழியாக திருப்பி விடப்படும். கோவை ஜங்ஷனுக்குப் பதில் போத்தனூரில் இந்த ரயில், மதியம் 12:15 முதல் 12:20 மணி வரை நின்று செல்லும்.

இதே தேதிகளில், எர்ணாகுளம்-கே.எஸ்.ஆர்., பெங்களூரு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில், கோவை ஜங்ஷனுக்குப் பதிலாக, மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டு, போத்தனூரில் மதியம் 12:47 முதல் 12:50 மணி வரை நின்று செல்லும்.

இவ்வாறு, அறிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us