Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தமிழ் இலக்கிய தேர்வில் 8,643 மாணவர்கள் பங்கேற்பு

தமிழ் இலக்கிய தேர்வில் 8,643 மாணவர்கள் பங்கேற்பு

தமிழ் இலக்கிய தேர்வில் 8,643 மாணவர்கள் பங்கேற்பு

தமிழ் இலக்கிய தேர்வில் 8,643 மாணவர்கள் பங்கேற்பு

ADDED : அக் 12, 2025 11:50 PM


Google News
கோவை:பிளஸ் 1 மாணவர்களுக்கு ஆண்டுதோறும் தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு நடத்தப்படுகிறது. தேர்ச்சி பெறும் 1,500 மாணவர்களுக்கு பள்ளி கல்வித்துறை சார்பில், 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1,500 வீதம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

50 சதவீதம் அரசு பள்ளி மாணவர்கள், மீதம் அரசு உதவிபெறும், மெட்ரிக், சி.பி.எஸ்.இ. போன்ற தனியார் பள்ளி மாணவர்கள், இந்த உதவித்தொகைக்கு தேர்வு செய்யப்படுவர்.

2025--26ம் ஆண்டுக்கான இத்தேர்வுக்கு, கோவை வருவாய் மாவட்டத்திலிருந்து 9,135 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். கோவை கல்வி மாவட்டத்தில், எஸ்.ஆர்.பி. அம்மணி அம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சித்தாபுதுார் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி உட் பட 26 தேர்வு மையங்களில் 6,634 மாணவர்கள் தேர்வு எழுதினர். அதேபோல், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 7 மையங்களில் 1,624 மாணவர்கள் தேர்வில் பங்கேற்றனர். மொத்தம், 8,643 மாணவர்-மாணவியர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us