Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மலைத்தேனீ கொட்டி காயம்

மலைத்தேனீ கொட்டி காயம்

மலைத்தேனீ கொட்டி காயம்

மலைத்தேனீ கொட்டி காயம்

ADDED : அக் 12, 2025 11:49 PM


Google News
தொண்டாமுத்தூர்:தீத்திபாளையத்தையொட்டியுள்ள மேற்குதொடர்ச்சி மலையில் உள்ள பெருமாள் குன்று மலையில், பிரசித்தி பெற்ற பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, நேற்றுமுன்தினம், புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையொட்டி, நூற்றுக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய சென்றனர்.

சுவாமி தரிசனம் முடித்துவிட்டு பகல், 1:30 மணிக்கு, அன்னதானம் உண்டு கொண்டிருக்கும்போது, திடீரென அப்பகுதிக்கு, மலைத்தேனீக்கள் வந்தன. அத்தேனீக்கள் கடித்து, 10க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு காயம் ஏற்பட்டது.

இருவருக்கு மட்டும், லேசான மயக்கம் ஏற்பட்டது. அவர்களை அருகிலிருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். முதலுதவி பெற்ற பின் இருவரும் வீடு திரும்பினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us