/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/குறைக்கப்பட்ட ஜி.எஸ்.டி. அறிய பில் கேட்டு வாங்குங்க! பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்குறைக்கப்பட்ட ஜி.எஸ்.டி. அறிய பில் கேட்டு வாங்குங்க! பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
குறைக்கப்பட்ட ஜி.எஸ்.டி. அறிய பில் கேட்டு வாங்குங்க! பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
குறைக்கப்பட்ட ஜி.எஸ்.டி. அறிய பில் கேட்டு வாங்குங்க! பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
குறைக்கப்பட்ட ஜி.எஸ்.டி. அறிய பில் கேட்டு வாங்குங்க! பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

விலைக்குறைவு அமல்
குறைக்கப்பட்ட ஜி.எஸ்.டி.யுடன் விற்பனை துவங்கி விட்டது. லேபிள்களில்,மாற்றம் செய்யப்பட்ட விலை என்ற ஸ்டிக்கர் ஒட்ட அறிவுறுத்தப்பட்டது. உற்பத்தியாளர்கள் தவிர, வேறு யாராலும் லேபிள்களில் மாற்றம் செய்ய இயலாது. மருந்துகளை திருப்பி அனுப்பி, ஸ்டிக்கர் மாற்றி வருவதற்குள், மருந்து தட்டுப்பாடு உருவாகி விடும்.
மக்கள் பார்த்து வாங்கணும்
சில்லரை விலை கடை களில், எம்.ஆர்.பி., விலையை காட்டிலும் குறைந்த விலைக்கு விற்கின்றனரா என, மக்கள் பார்த்து வாங்க வேண்டும்.
வரி குறைக்காத நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை:
கோவை, மத்திய ஜி.எஸ்.டி. ஆணையரக அதிகாரிகள் கூறியதாவது: வரிசீரமைப்பின் தாக்கம் குறித்து கண்காணித்து வருகிறோம். வரி விகிதம் குறைக்கப்பட்ட பொருட்களின் விலையைக் குறைக்காமல், விற்பனை செய்வது குற்றம். இக்குற்றத்தில் ஈடுபடும் சம்பந்தப்பட்ட வணிக நிறுவனங்கள், கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வரிக் குறைப்பின் பலன் கட்டாயம் நுகர்வோரைச் சென்றடைய வேண்டும். நுகர்வோர் பொருட்கள் வாங்கும்போது, கட்டாயம் ஜி.எஸ்.டி. பில் கேட்டு வாங்குங்கள். அப்போது அவர்களுக்கு விலையைக் குறைப்பதைத் தவிர வேறு வழியில்லை. பில் இல்லாத பரிவர்த்தனைகளை மக்கள் தவிர்க்க வேண்டும். வரி குறைக்கப்பட்ட பொருட்களை, உரிய விலைக்குறைப்புடன் விற்பனை செய்யாதவர்கள், கடுமையான சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
பேக்கிங் வரியில் மாற்றம்; வியாபாரிகள் கோரிக்கை
கோவை மளிகை வியாபாரிகள் சங்க தலைவர் பிரபாகரன் கூறியதாவது: ஜி.எஸ்.டி. 2.0 குறைப்பு அடிப்படையில், மளிகை பொருட்களில் பெரிய மாற்றங்கள் இல்லை. பேக்கிங் செய்யப்பட்ட அனைத்து அத்தியாவசிய உணவு பொருட்களுக்கும் முன் இருந்த, 5 சதவீத வரி தொடர்கிறது. அத்தியாவசிய பொருட்கள் 25 கிலோவுக்கு மேல் பேக் செய்யும் போதும், 25 கிலோவுக்கு கீழ் பிராண்டுபேக் செய்யாமல் வாங்கும் போதும் வரி இல்லை. பன்னீர், நெய், பாதாம், சோயா ஆகிய பொருட்களுக்கு 12 சதவீதமாக இருந்த வரி, 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அனைத்து அத்தியாவசிய பொருட்கள் எந்த அளவில் பேக் செய்யப்பட்டாலும் வரி இல்லை என்ற நிலையை அறிவிக்க வேண்டும். வியாபாரிகள் 25 கிலோ வரை பேக் செய்தால் 5 சதவீத வரி இருப்பதால், 26 கிலோவாக பேக் செய்து விற்பதை காணமுடிகிறது. இதற்கு அரசு விலக்களித்தால் சிறப்பாக இருக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.