Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மருதமலையில் மேம்பாட்டுபணி துவக்கி வைத்தார் முதல்வர்

மருதமலையில் மேம்பாட்டுபணி துவக்கி வைத்தார் முதல்வர்

மருதமலையில் மேம்பாட்டுபணி துவக்கி வைத்தார் முதல்வர்

மருதமலையில் மேம்பாட்டுபணி துவக்கி வைத்தார் முதல்வர்

ADDED : அக் 14, 2025 02:07 AM


Google News
வடவள்ளி:கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், பழைய படிக்கட்டுகளை சீரமைத்தல், ஆர்.சி.சி., மண்டபங்கள் அமைக்கும் பணி மற்றும் தடுப்புச் சுவர் அமைக்கும் பணி, அடிவாரத்தில் டிக்கெட் வழங்கும் அறை, பூஜை பொருட்கள் விற்பனை மையம் மற்றும் பக்தர்கள் தங்கும் விடுதி, பணியாளர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி என, 33.63 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்படஉள்ளன.

இப்பணிகளை, முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக, நேற்று துவக்கி வைத்தார். கோவிலில் நடந்த விழாவில், கலெக்டர் பவன்குமார், மேயர் ரங்கநாயகி, கோவில் தக்கார் ஜெயகுமார், கோவில் துணை கமிஷனர் செந்தில்குமார் ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us