ADDED : அக் 12, 2025 11:49 PM
கோவை;மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம் மேயர் ரங்கநாயகி தலைமையிலும், கமிஷனர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையிலும் நாளை காலை, 10:30 மணிக்கு நடக்கிறது.
பிரதான அலுவலகத்தில் நடக்கும் இக்கூட்டத்தில், மூங்கில் பூங்கா அமைத்தல், மழைநீர் வடிகால் அமைத்தல் உள்ளிட்ட,26 தீர்மானங்கள் மன்ற அனுமதிக்காக முன்வைக்கப்படவுள்ளது.


