Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி; துடிப்புடன் விளையாடும் வீரர், வீராங்கனைகள்

மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி; துடிப்புடன் விளையாடும் வீரர், வீராங்கனைகள்

மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி; துடிப்புடன் விளையாடும் வீரர், வீராங்கனைகள்

மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி; துடிப்புடன் விளையாடும் வீரர், வீராங்கனைகள்

ADDED : ஜூன் 19, 2025 05:21 AM


Google News
Latest Tamil News
கோவை : மாவட்ட அளவிலான நான்காம் ஆண்டு, 'ஸ்ரீ நவகோடி நினைவு டிராபி' கூடைப்பந்து போட்டி, நேரு ஸ்டேடியம் எதிரே உள்ள கூடைப்பந்து மைதானத்தில், நேற்று துவங்கியது.

இதில், 13 வயதுக்குட்பட்ட மாணவியர் பிரிவில் ஏழு அணிகளும், 16 வயதுக்குட்பட்ட மாணவியர் பிரிவில், 9 அணிகள், 13 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பிரிவில், 17 அணிகள், 16 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பிரிவில், 12 அணிகள் பங்கேற்றுள்ளன.

வரும், 22ம் தேதி வரை போட்டிகள் நடக்கின்றன. நேற்று காலை துவங்கிய, 16 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான முதல் போட்டியில், எஸ்.வி.ஜி.வி., அணியும், ஒய்.எம்.சி.ஏ., அணியும் மோதின. சுறுசுறுப்பாக விளையாடிய ஒய்.எம்.சி.ஏ., அணியினர், 54-47 என்ற புள்ளிகளில், எஸ்.வி.ஜி.வி., அணியை வென்றனர்.

அதிக பட்சமாக எஸ்.வி.ஜி.வி., வீரர் வியாஸ், 17 புள்ளிகளும், ஒய்.எம்.சி.ஏ., வீரர் தரண், 16 புள்ளி களும் எடுத்தனர். 13 வயதுக்குட்பட்ட மாணவியருக்கான முதல் போட்டியில் பாரதி அணியும், எஸ்.வி.ஜி.வி., அணியும் மோதின.

இதில், எஸ்.வி.ஜி.வி., அணி, 47-22 என்ற புள்ளி களில் பாரதி அணியை வென்றது. பாரதி அணி வீராங்கனை அனோகா ஏழு புள்ளிகளும், எஸ்.வி.ஜி.வி., வீராங்கனை அக்ஷிதா, 13 புள்ளிகளும் அதிகபட்சமாக எடுத்தனர். தொடர்ந்து போட்டிகள் நடக்கின்றன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us