Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு

நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு

நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு

நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு

ADDED : ஜூன் 16, 2025 11:44 PM


Google News
Latest Tamil News
தொண்டாமுத்தூர்; கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கனமழை காரணமாக, நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில், வளிமண்டல சுழற்சி காரணமாக, கோவை மாவட்டத்தில் கன மழை பெய்யும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், கடந்த 3 நாட்களாக, கோவை மேற்கு தொடர்ச்சி மலையில், கனமழை பெய்து வருகிறது. நேற்றுமுன்தினம் காலை, 8:00 முதல் நேற்று காலை, 8:00 மணி வரையிலான நிலவரப்படி, சிறுவாணி நீர் பிடிப்பு பகுதியில், 147 மி.மீ., மழையும், சிறுவாணி அடிவாரப் பகுதியில், 79 மி.மீ., மழையும் பதிவாகியது.

இதனால், நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. நொய்யல் ஆற்றின் முதல் தடுப்பணையான சித்திரைச்சாவடி தடுப்பணையில், வினாடிக்கு, 1,200 கன அடி தண்ணீர் ஆற்றில் வெளியேறியது. வாய்க்கால்களில், வினாடிக்கு, 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us