ADDED : செப் 23, 2025 09:06 PM
கோவில்பாளையம், ;கோவில்பாளையம் அருகே உள்ள வெள்ளானைப்பட்டி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்களுக்கு இன்று( 24ம் தேதி) வெள்ளானைப்பட்டி, பெரிய நாயகி அம்மன் மண்டபத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடைபெறுகிறது. காலை 9:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை முகாம் நடைபெறுகிறது.
முகாமில், மகளிர் உரிமைத் தொகை, ரேஷன் கார்டு, ஆதார் திருத்தம், நில அளவை, பட்டா மாறுதல், தொகுப்பு வீடு, வீட்டு மனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு மனு அளிக்கலாம்.
'வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித் துறை, வேளாண்துறை உள்ளிட்ட 17 துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். 45 வகையான சேவைகள் வழங்கப்பட உள்ளன. எனவே, பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்,' என, வருவாய் துறையினர் தெரிவித்துள்ளனர்.