/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சர்வதேச யோகா போட்டியில் மாணவர்கள் வெற்றி சர்வதேச யோகா போட்டியில் மாணவர்கள் வெற்றி
சர்வதேச யோகா போட்டியில் மாணவர்கள் வெற்றி
சர்வதேச யோகா போட்டியில் மாணவர்கள் வெற்றி
சர்வதேச யோகா போட்டியில் மாணவர்கள் வெற்றி
ADDED : ஜூன் 19, 2025 07:40 AM

உடுமலை : சர்வதேச அளவிலான யோகா போட்டியில், உடுமலை மாணவர்கள் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர்.
சர்வதேச ஐக்கிய யோகாசன அமைப்பின் தலைமையில், பல்வேறு யோகாசன அமைப்புகள் இணைந்து, இலங்கை திருகோண மலையில் சர்வதேச அளவிலான யோகா சாம்பியன்ஷிப் போட்டி நடத்தியது.
இப்போட்டியில், 5 நாடுகளைச் சேர்ந்த 243 போட்டியாளர்கள் பல்வேறு பிரிவுகளில் பங்கேற்றனர். இதில் உடுமலை சாய்ராம் டியூட்டர்ஸ் யோகா பயிற்சி மையத்தின் சார்பில், ஷ்ரவன் மற்றும் ஷ்ரத்தா இருவரும் பங்கேற்றனர்.
மாணவர்கள் இருவரும், 8 முதல் 12 வயதுக்குட்பட்டோர் பிரிவில் முதலிடத்தில் வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு யோகா பயிற்சி மையத்தினர், பெற்றோர், கல்வியாளர்கள் பாராட்டு தெரிவித்தனர்.