Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஆனி திருமஞ்சனம்

ஆனி திருமஞ்சனம்

ஆனி திருமஞ்சனம்

ஆனி திருமஞ்சனம்

ADDED : ஜூலை 13, 2024 12:51 AM


Google News
விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் வளாகத்தில் சிவகாமி அம்மன் உடனுறை நடராஜர் சன்னதியில் ஆனி திருமஞ்சனம் நடந்தது.

அதனையொட்டி, நேற்று காலை 9:00 மணிக்கு சிவகாமி அம்மன் நடராஜர் உற்சவமூர்த்திகளுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

அதன்பின், காலை 10:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சிவகாமி அம்மன், நடராஜர் சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது. 11:30 மணியளவில் சுவாமிகள் கோவில் பிரகாரம் வலம் வந்தனர். அப்போது ராஜகோபுரம் கதவுகள் மூடி திறக்கப்பட்டது.

அதன்பின், உற்சவமூர்த்திகள் எழுந்தருள மகா தீபாரதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி வீதியுலா நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us