பரங்கிப்பேட்டையில் மூதாட்டி மாயம்
பரங்கிப்பேட்டையில் மூதாட்டி மாயம்
பரங்கிப்பேட்டையில் மூதாட்டி மாயம்
ADDED : ஜூன் 26, 2024 03:59 AM
பரங்கிப்பேட்டை, : பரங்கிப்பேட்டையில், மூதாட்டியை காணவில்லை என, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கும்பகோணம் ஜெகன்னாதபிள்ளை கோவில் வீதியை சேர்ந்தவர் நாடிமுத்து. இவரது, மனைவி பார்வதி, 65; இவர்,கடந்த 15ம் தேதி, பரங்கிப்பேட்டையில் உள்ள குடும்ப நண்பரான மோகன் என்பவர் வீட்டிற்கு வந்தார். கடந்த 24ம் தேதி, தஞ்சாவூரில் உள்ள மகள் வீட்டிற்கு செல்வதாக கூறி, பரங்கிப்பேட்டை பஸ் நிலையத்தில் பஸ் ஏறியவரை காணவில்லை. ஊருக்கும் செல்லவில்லை.
இதுகுறித்து, மோகன் கொடுத்த புகாரில், பரங்கிப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.