Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கடலுாரில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

கடலுாரில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

கடலுாரில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

கடலுாரில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

ADDED : அக் 23, 2025 12:58 AM


Google News
கடலுார்: தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை 24ம் தேதி நடைபெற உள்ளது.

இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:

கடலுார் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக ஒவ்வொரு மாதமும் சிறிய அளவிலானதனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து இம்மாதம் 24ம் தேதி அன்று கடலுார், மாவட்ட

வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இம்முகாமில் 15-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான நபர்களை தேர்வு செய்து உடனடியாக பணி நியமன ஆணை வழங்கப்படவுள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு

ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறும், இம்முகாமில் தேர்ந்தெடுக்கப்படும் பதிவுதாரர்களின் பதிவு எண் வேலைவாய்ப்பு அலுவலக பதிவிலிருந்து நீக்கம் செய்யப்படமாட்டாது.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us