ADDED : செப் 14, 2025 01:47 AM
பெண்ணாடம், : பெண்ணாடம் அருகே குடும்ப பிரச்னையில் கணவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
பெண்ணாடம் அடுத்த ஓ.கீரனுாரைச் சேர்ந்தவர் அய்யப்பன், 29; இவரது மனைவி பிரியாகாந்தி. தம்பதி இடையே அடிக்கடி குடும்ப பிரச்னை இருந்தது. கடந்த 3ம்தேதி அவர்களுக்குள் மீண்டும் பிரச்னை ஏற்பட்டதில் மனமுடைந்த அய்யப்பன் வீட்டில் இருந்த மண்ணெண்ணெய்யை தன் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். புகாரின்பேரில், பெண்ணாடம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.