Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ குறைகேட்பு நாள் கூட்டம் 360 மனுக்கள் மீது விசாரணை

 குறைகேட்பு நாள் கூட்டம் 360 மனுக்கள் மீது விசாரணை

 குறைகேட்பு நாள் கூட்டம் 360 மனுக்கள் மீது விசாரணை

 குறைகேட்பு நாள் கூட்டம் 360 மனுக்கள் மீது விசாரணை

ADDED : டிச 02, 2025 04:59 AM


Google News
Latest Tamil News
கடலுார்: கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் நேற்று நடந்தது.

கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். நேற்றைய கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 360 மனுக்கள் பெறப்பட்டன.

பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) தீபா, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) ஷபானா அஞ்சும், தனித்துணை ஆட்சியர் தங்கமணி, துணை கலெக்டர் (பயிற்சி) கே.டியுக் பார்க்கர், உட்பட பலர் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us