/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ நிழற்குடைக்கு ஒதுக்கிய நிதி பற்றாக்குறை; வெயிலில் பயணிகள் காத்திருக்கும் அவலம் நிழற்குடைக்கு ஒதுக்கிய நிதி பற்றாக்குறை; வெயிலில் பயணிகள் காத்திருக்கும் அவலம்
நிழற்குடைக்கு ஒதுக்கிய நிதி பற்றாக்குறை; வெயிலில் பயணிகள் காத்திருக்கும் அவலம்
நிழற்குடைக்கு ஒதுக்கிய நிதி பற்றாக்குறை; வெயிலில் பயணிகள் காத்திருக்கும் அவலம்
நிழற்குடைக்கு ஒதுக்கிய நிதி பற்றாக்குறை; வெயிலில் பயணிகள் காத்திருக்கும் அவலம்
ADDED : மே 26, 2025 12:55 AM

விருத்தாசலம் : விருத்தாசலம் கடைவீதியில் எம்.எல்.ஏ., ஒதுக்கிய நிதியும் பற்றாக்குறையால் திரும்பியதால், திறந்தவெளியில் சுட்டெரிக்கும் வெயிலில் பயணிகள் அவதியடைகின்றனர்.
விருத்தாசலத்தில் பிரதான பெண்ணாடம் சாலையில், கடை வீதி பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு விருத்தகிரீஸ்வரர் கோவில், நகராட்சி அலுவலகம், வி.ஏ.ஓ., அலுவலகம், பெருவணிக நிறுவனங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு மற்றும் போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் உட்பட ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன.
ஆனால், பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால் சுட்டெரிக்கும் வெயிலில் குழந்தைகள், பெரியவர்கள் கடைகளின் முகப்புகளில் தஞ்சமடையும் நிலை தொடர்கிறது. இதனால் வியாபார நேரங்களில் பயணிகளுக்கும், வியாபாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. பஸ்கள் வரும் போது ஓடிவந்து ஏறும் முதியோர், பெண்கள் கீழே விழுந்து காயமடைகின்றனர்.
இந்நிலையில், கடந்தாண்டு ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் நிழற்குடை கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் நிழற்குடை கட்டுதற்கு நிதி பற்றாக்குறை ஏற்பட்டதால், ஒப்பந்ததாரர்கள் முன்வரவில்லை. இதனால், நிதி திரும்பியதால் நிழற்குடை கட்டும் பணியும் கிடப்பில் உள்ளது.
எனவே, கடைவீதி பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை கட்டித்தர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.