ADDED : ஜூலை 14, 2024 02:52 AM
அரூர்: அரூரிலுள்ள தனியார் மண்டி மற்றும் காய்கறி கடைகளில், நேற்று முன்தினம் ஒரு கிலோ தக்காளி, 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
நேற்று தக்காளி விலை அதிகரித்து, ஒரு கிலோ, 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. மண்டிகளுக்கு வரும் தக்காளியின் வரத்து குறைந்ததே விலை உயர்வுக்கு காரணம் என, வியாபாரிகள் கூறினர்.