ADDED : செப் 25, 2025 01:44 AM
தர்மபுரி :தர்மபுரி மாவட்டத்தில், பொதுமக்களின் புகார் மற்றும் குறைகள் குறித்த மனுக்கள் மீதான குறைதீர் முகாம், தர்மபுரி மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் வார புதன்கிழமைகளில் நடக்கிறது.
நேற்று, மாவட்ட, எஸ்.பி., மகேஷ்வரன் தலைமையில், நடந்த முகாமில், ஏற்கனவே பெறப்பட்ட, 77 மனுக்களின் பிரச்னைகள் தீர்த்து வைக்கப்பட்டது. மேலும், புதிதாக, 52 மனுக்கள் பெறப்பட்டது. இதில், ஏ.டி.எஸ்.பி., பாலசுப்பிரமணியம், இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.