Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/கரும்பில் பூச்சி தாக்குதல்: விவசாயிகள் கவலை

கரும்பில் பூச்சி தாக்குதல்: விவசாயிகள் கவலை

கரும்பில் பூச்சி தாக்குதல்: விவசாயிகள் கவலை

கரும்பில் பூச்சி தாக்குதல்: விவசாயிகள் கவலை

ADDED : ஜூலை 15, 2024 12:15 AM


Google News
அரூர்: அரூரில், கரும்பு பயிர்களில் பூச்சிகளின் தாக்கம் அதிகரித்துள்-ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.தர்மபுரி மாவட்டத்தில், அரூர், மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நடவு செய்யப்படும் கரும்பை, கோபாலபு-ரத்திலுள்ள சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு விவசாயிகள் ஒப்பந்தம் செய்து, அரவைக்கு அனுப்புகின்றனர்.

கடந்தாண்டு போதிய மழையின்றி, வறட்சியால் கரும்பு காய்ந்து வருகிறது. இந்நிலையில், கரும்பு பயிரில் மாவுப்பூச்சி தாக்கு-தலால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது: அச்சல்வாடி, மொரப்பூர், கடத்துார் உள்-ளிட்ட பல்வேறு இடங்களில், கரும்பு பயிர்களில் மாவுப்பூச்சி தாக்குதல் பரவலாக காணப்படுகிறது. வெள்ளை நிறத்தில் மிகச்சி-றிய அளவிலான மாவுப்பூச்சி கரும்பு சோகை அடியிலிருந்து சோகையின் பச்சை நிறத்தை மாற்றி விடுகிறது. கரும்பின் தண்-டுப்பகுதியில், அதன் நீர்ச்சத்தை உறிஞ்சி விடுவதால், கரும்பில் இருந்து எடுக்கும் சாறு பாதியாக குறைந்து விடுவதால், மகசூல் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மாவுப்பூச்சியை கட்டுப்படுத்த முடி-யாததால், விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர். மேலும், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் நிலையுள்ளது. எனவே, இந்த பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த ஆலை நிர்வாகம் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us