Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ காந்தி ஜெயந்தி தினத்தன்று இறைச்சி கடைகள் திறப்பு

காந்தி ஜெயந்தி தினத்தன்று இறைச்சி கடைகள் திறப்பு

காந்தி ஜெயந்தி தினத்தன்று இறைச்சி கடைகள் திறப்பு

காந்தி ஜெயந்தி தினத்தன்று இறைச்சி கடைகள் திறப்பு

ADDED : அக் 03, 2025 01:46 AM


Google News
அரூர், காந்தி ஜெயந்தி, வள்ளலார் தினம், மகாவீர் ஜெயந்தி உள்ளிட்ட நாட்களில் இறைச்சி விற்பனைக்கு தடை விதிப்பதுடன், மதுபான கடைகள் செயல்படக்கூடாது என்ற உத்தரவு உள்ளது. அதன்படி, காந்தி ஜெயந்தி தினமான நேற்று, அரசின் உத்தரவை மீறி, தர்மபுரி மாவட்டம்,

அரூரில், பஸ் ஸ்டாண்ட், வர்ணதீர்த்தம், பாட்சாபேட்டை, திரு.வி.க., நகர் உள்ளிட்ட இடங்களில் மாடு, ஆடு, கோழி மற்றும் மீன் ஆகிய இறைச்சி கடைகளின் ஷட்டர்கள் பாதி திறந்த நிலையில், வழக்கம் போல் இயங்கின. இவற்றை சுகாதாரத்துறையினரும் கண்டு கொள்ளவில்லை. மேலும், சந்துக்கடைகளில், 160 ரூபாய் மதுபாட்டில், 260 ரூபாய் என, கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டதாக குடிமகன்கள் புகார் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us