ADDED : செப் 25, 2025 01:43 AM
பாப்பிரெட்டிப்பட்டி, :பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி என்.எஸ்.எஸ்., சார்பில், பசுமை தமிழ்நாடு இயக்க தினமான, செப்., 26ஐ கொண்டாடும் வகையில், மரக்கன்று நடும் விழா பாப்பிரெட்டிப்பட்டி வனச்சரகத்தில் நடந்தது. திட்ட அலுவலர் பிரகாசம் தலைமை வகித்தார். வனவர் தினேஷ் குமார் முன்னிலை வகித்தார்.
உதவி திட்ட அலுவலர் பார்த்தீபன் வரவேற்றார். பாப்பிரெட்டிப்பட்டி சேர்வராயன், வடக்கு வனச்சரக அலுவலர் சிவக்குமார், வனச்சரக பகுதியில் நாவல் மரக்கன்றுகள் நடுதல் பணியை, தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் வனச்சரக அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.