ADDED : ஜூலை 17, 2024 12:26 AM

* திண்டுக்கல் மதுரை ரோட்டில் உள்ள லுார்து மாதா மெட்ரிக்., பள்ளியில் காமராஜரின் 122- வது பிறந்த நாளை முன்னிட்டு அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கும், காமராஜர் பற்றிய கட்டுரை, கவிதை, ஓவியம், பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்க பரிசுகள் வழங்கப்பட்டது.
பள்ளி தாளாளர் அருள்மேரி தலைமை வகித்தார். முதல்வர் ரெக்ஸிலின்மேரி முன்னிலை வகித்தார். செஞ்சிலுவை சங்க மாவட்ட சேர்மன் காஜாமைதீன் பரிசுகளை வழங்கினார். ஆசிரியைகள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.