/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ முருகன் கோயில்களில் வளர்பிறை சஷ்டி வழிபாடு முருகன் கோயில்களில் வளர்பிறை சஷ்டி வழிபாடு
முருகன் கோயில்களில் வளர்பிறை சஷ்டி வழிபாடு
முருகன் கோயில்களில் வளர்பிறை சஷ்டி வழிபாடு
முருகன் கோயில்களில் வளர்பிறை சஷ்டி வழிபாடு
ADDED : ஜூன் 13, 2024 07:04 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட முருகன் கோயில்களில் வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு, அலங்காரம், அபிேஷகம் நடந்தது.அபிராமி அம்மன் கோயிலுள்ள ஆறுமுகப் பெருமான் சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷகம், தீபராதனைகள் நடந்தன.
ரயிலடி சித்தி விநாயகர் திருக்கோயிலுள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்பிரணிய சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்துக்கு பின் தீபாராதனை நடந்தது. பால தண்டாயுதபாணி சுவாமிக்கும் சிறப்பு அலங்காரம் நடந்தது. காலை முதலே பக்தர்கள் கோயில்களில் வழிபாட்டில் ஈடுபட்டனர்.சுப்பிரமணிய சுவாமி, என்.ஜி.ஓ., காலனி முருகன் கோயில், மேட்டுராஜக்காபட்டி சுப்ரமணிய சுவாமி, பாதாள செம்பு முருகன் உள்ளிட்ட முருகன் கோயில்களில் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. மாலை சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது.