/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ தூர்வாராது தூர்ந்து போன அய்யம்பாளையம் மருதாநதி ஆறு தூர்வாராது தூர்ந்து போன அய்யம்பாளையம் மருதாநதி ஆறு
தூர்வாராது தூர்ந்து போன அய்யம்பாளையம் மருதாநதி ஆறு
தூர்வாராது தூர்ந்து போன அய்யம்பாளையம் மருதாநதி ஆறு
தூர்வாராது தூர்ந்து போன அய்யம்பாளையம் மருதாநதி ஆறு

சமநிலையில் ஆறு , ரோடு
பன்னீர்செல்வம், விவசாயி ,தாண்டிக்குடி: ஆண்டுதோறும் இந்த ஆற்றில் தண்ணீர் செல்லும் நிலையில் 10 அடிக்கு மேல் ஆழமும், 50 அடி அகலம் கொண்டதாக இருந்தது. விவசாயிகள் சிலர் ஆற்றுப்படுகைகளை ஆக்கிரமித்து விவசாயம் செய்ய தொடங்க ஆங்காங்கு மோட்டார்கள் அமைத்து தடுப்புகளை ஏற்படுத்தியதால் ஆக்கிரமிப்புகள் அதிகரிக்கத் தொடங்கின. மேலும் கஜா புயலின் போது ஏற்பட்ட மழை வெள்ளத்தில் ஆற்றுப்படுகையில் வண்டல் மண் சூழ்ந்து மண் மேவியது. தொடர்ந்து துார்வாராததால் தற்போது ஆற்றுப் படுகையையும் ரோடும் சமவெளி போன்று உள்ளது.
கவனம் செலுத்துவதில்லை
லட்சுமணன், விவசாயி, தாண்டிக்குடி: அய்யம்பாளையம் மருதாநதி அணையின் முக்கிய நீர் பிடிப்பு ஆறான இந்த ஆறு குறித்த கண்காணிப்பில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கவனம் செலுத்துவதில்லை. உள்ளாட்சி அமைப்புகளும் இதன் மீது கவனம் செலுத்தாததால் இந்த ஆறு துார்வாராத நிலையில் துார்ந்து போய் உள்ளது. 30 கி. மீ., மேல் பயணித்துச் செல்லும் இந்த ஆற்றின் படுகைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் ஆய்வு செய்து அளவீடு செய்தால் ஆற்றின் உண்மையான அளவுகோல் தெரிய வரும்.