Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ திருமலைக்கேணியில் சஷ்டி விழா

திருமலைக்கேணியில் சஷ்டி விழா

திருமலைக்கேணியில் சஷ்டி விழா

திருமலைக்கேணியில் சஷ்டி விழா

ADDED : ஜூலை 13, 2024 04:31 AM


Google News
Latest Tamil News
நத்தம் : திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆனி மாத சஷ்டி ஊர்வல நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதையொட்டி மூலவர் சுப்ரமணிய சுவாமி, உற்ஸவர் முருகப்பெருமானுக்கும் பால், பழம், பன்னீர், சந்தனம், ஜவ்வாது, விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 21 வகை அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து லட்சார்ச்சனை, தீபாராதனை நடந்தது.

பக்தர்கள் அரோகரா கோஷமிட கோயிலை வலம் வந்து தரிசனம் செய்தனர். காமாட்சி மவுனகுரு மடத்திலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை கோயில் அறக்காவலர் அழகுலிங்கம் செய்திருந்தார்.

நத்தம் அசோக் நகர் பகவதி அம்மன் கோயிலில் உள்ள வெற்றிவேல் முருகன் சன்னிதியில் முருகனுக்கு ராஜா அலங்காரம் செய்ய சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது.

அன்னதானம் வழங்கப்பட்டது. வேம்பார்பட்டி பாலமுருகன் கோயிலில் சஷ்டி பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us