Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பக்ரீத்; செம்பட்டி சந்தையில் ஆடுகள் விலை உயர்வு

பக்ரீத்; செம்பட்டி சந்தையில் ஆடுகள் விலை உயர்வு

பக்ரீத்; செம்பட்டி சந்தையில் ஆடுகள் விலை உயர்வு

பக்ரீத்; செம்பட்டி சந்தையில் ஆடுகள் விலை உயர்வு

ADDED : ஜூன் 15, 2024 06:33 AM


Google News
செம்பட்டி : பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு செம்பட்டி வாரச்சந்தையில் நேற்று ஆடுகள் விலை அதிகரித்து விற்பனையாகின.

செம்பட்டியில் வெள்ளிக்கிழமை தோறும் வார சந்தை நடப்பது வழக்கம். வழக்கமான மளிகை, வீட்டு உபயோக பொருட்கள் மட்டுமின்றி இங்கு ஆடு, மாடு வர்த்தகமும் நடக்கும். சுற்று கிராமங்கள் மட்டுமின்றி வெளி மாவட்ட வியாபாரிகளும் ஆடுகள். அவற்றின் தோல் போன்றவற்றை வாங்குவதற்காக இங்கு வருவது வழக்கம். நேற்று செம்பட்டி, நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், வத்தலகுண்டு சுற்று கிராம பகுதிகளில் இருந்து ஆடு வளர்ப்போர் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். வெள்ளாடு, செம்மறி, குறும்பாடு போன்ற வகைகளில் ஏராளமான ஆடுகள் வந்திருந்தன. நாளை மறுநாள் ( ஜூன் 17 ) பக்ரீத் பண்டிகை வருவதை முன்னிட்டு கடந்த வாரங்களை விட ஆடுகளின் விலை கணிசமான அதிகரித்திருந்தது.

10 கிலோ எடை கொண்ட குட்டிகள் முதல் அதிக எடை உள்ள ஆடுகள் வரை வழக்கத்தை விட 30 சதவீதத்திற்கும் கூடுதலாக விலை அதிகரித்து விற்பனையாகின. சந்தையின் மொத்த வியாபார மதிப்பும் ரூ. பல லட்சம் அளவிற்கு அதிகரித்து இருந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us