/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ சார்பதிவாளர் உட்பட 6 பேர் மீது வழக்கு சார்பதிவாளர் உட்பட 6 பேர் மீது வழக்கு
சார்பதிவாளர் உட்பட 6 பேர் மீது வழக்கு
சார்பதிவாளர் உட்பட 6 பேர் மீது வழக்கு
சார்பதிவாளர் உட்பட 6 பேர் மீது வழக்கு
ADDED : ஜூன் 14, 2024 07:17 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி சார்பதிவாளர் அலுவலகத்தில் நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.1.64 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் ,சார்பதிவாளர் உட்பட 6 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
கன்னிவாடி சார்பதிவாளர் அலுவலகத்தில் திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி.நாகராஜன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். கணக்கில் வராத ரூ.1.64 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து சார்பதிவாளர் செந்தில்குமார், அலுவலக ஊழியர்கள் உட்பட 6 பேர் மீது நேற்று வழக்கு பதிந்துள்ளனர்.