ADDED : செப் 23, 2025 04:43 AM
நத்தம்: நத்தம் என்.பி.ஆர்., கல்லுாரி ,மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
மாவட்ட காசநோய் துறை மருத்துவ அதிகாரி சந்திரி பிரியா தொடங்கி வைத்தார். ஆட்டோக்களில் எய்ட்ஸ் விழிப்புணர்வு துண்டு பிரசுர ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது. அரசு மருத்துவர்கள் சதீஸ்குமார், மலைச்சாமி, சித் த மருத்துவர் வசந்த்குமார், மாவட்ட மேற்பார்வையாளர் ஜெசிந்தா, நம்பிக்கை மைய ஆலோசகர் ஆறுமுகம், என்.பி.ஆர்., கல்லுாரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.