ADDED : அக் 23, 2025 03:58 AM

பழநி: பழநியை சேர்ந்தவர் மனோகரன் .
இவரது சொந்தமான காரை வேலைக்காக ஒர்க் ஷாப்பில் விட்டிருந்தார். காரை ஒர்க் ஷாப் பணியாளர் திண்டுக்கல் ரோடு பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே ஓட்டி சென்றபோது திடீரென காரில் தீ பற்றியது . பொதுமக்கள் , தீயணைப்புத் துறையினரும் தீ பரவாமல் தடுத்தனர்.


