/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் காந்திகிராம பல்கலை பேராசிரியர்கள் அமெரிக்க குழு பட்டியலில் 3500 இந்திய விஞ்ஞானிகள் உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் காந்திகிராம பல்கலை பேராசிரியர்கள் அமெரிக்க குழு பட்டியலில் 3500 இந்திய விஞ்ஞானிகள்
உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் காந்திகிராம பல்கலை பேராசிரியர்கள் அமெரிக்க குழு பட்டியலில் 3500 இந்திய விஞ்ஞானிகள்
உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் காந்திகிராம பல்கலை பேராசிரியர்கள் அமெரிக்க குழு பட்டியலில் 3500 இந்திய விஞ்ஞானிகள்
உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் காந்திகிராம பல்கலை பேராசிரியர்கள் அமெரிக்க குழு பட்டியலில் 3500 இந்திய விஞ்ஞானிகள்
ADDED : செப் 24, 2025 02:52 AM

சின்னாளபட்டி,:அமெரிக்க பல்கலை பேராசிரியர் குழு வெளியிட்டுள்ள உலகின் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முதல் 2 சதவீத விஞ்ஞானிகள் பட்டியலில் காந்திகிராம பல்கலையின் 6 பேராசிரியர்கள் இடம் பெற்றுள்ளனர்.
அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலை பேராசிரியர் ஜான்லொன்னிடிஸ் தலைமையிலான குழுவினர் பல்வேறு நாடுகளை சேர்ந்த நிபுணத்துவம் பெற்ற ஆராய்ச்சியாளர்களுக்கான பட்டியல் தயாரித்தனர். 22 அறிவியல் துறைகள், 176 துணை துறைகளில் உலகின் சிறந்த விஞ்ஞானிகள் இப்பட்டியலில் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அனைவரது குறைந்தபட்சம் 5 ஆய்வு கட்டுரைகள், புலம் , துணை புலம் சார்ந்த சதவீதங்களின் அடிப்படையில் தரவரிசை ஏற்படுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 2 லட்சத்திற்கு அதிகமான ஆராய்ச்சியாளர்களும், இந்தியாவை சேர்ந்த 3500க்கு கூடுதலான விஞ்ஞானிகளும் இதில் இடம்பெற்றுள்ளனர்.
2024ம் ஆண்டு தாக்கத்துக்கான பட்டியலில் காந்திகிராம நிகர் நிலை பல்கலை விஞ்ஞானிகள் முரளிதரன், பாலசுப்பிரமணியம், மீனாட்சி, மாரிமுத்து, அசோக்குமார், மலைக்கொழுந்தன் இடம்பெற்றுள்ளனர்.
இதில் கணிதவியல் விஞ்ஞானி பாலசுப்ரமணியம், தெளிவற்ற தர்க்க அணுகுமுறைகளை பயன்படுத்தி தரம் குறைந்த படங்களை உயர்தரமாக மாற்றுதல், கிரிப்டோகிராபி , செயலாக்க தொழில்நுட்பம் மூலம் நோயாளியின் மூளையில் ஏற்படும் அதிர்வுகளை கண்டறியும் முறை சார்ந்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.
இயற்பியல் துறை விஞ்ஞானி முரளிதரன், மீதேக்கி என்ற தலைப்பிலும், வேதியியல் துறை விஞ்ஞானி மீனாட்சி கழிவு நீரில் உள்ள நச்சுத்தன்மை உடைய புளூரைடு, காரியம், குரோமியம், பாதரசம்,பிற நச்சுக்களை உறிஞ்சுதல் மூலமாக நீக்கும் முறைகளை உருவாக்கும் ஆய்வில் ஈடுபட்டுள்ளார்.
இயற்பியல் விஞ்ஞானி மாரிமுத்து, அரிதான பூமியின் தாதுக்களை கொண்டு தயாரிக்கப்படும் கண்ணாடிகள் மூலம் வெள்ளை ஒளி , லேசர் வழி உமிழ்வதற்கான ஆய்வு, அபாயகர கதிர்வீச்சை தடுக்கும் கண்ணாடிகள் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
வேளாண் கால்நடை அறிவியல் துறை விஞ்ஞானி அசோக்குமார், அரிசி ,சிறு தானியங்களில் ஊட்டச்சத்து கூறுகளில் மரபணு வேறுபாடு, நேனோ துகள்களை பயன்படுத்தி விதை முளைப்பு , பயிர் வளர்ச்சி மேம்பாட்டிற்கான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். உயிரியல் துறை விஞ்ஞானி மலைக்கொழுந்தன், உயிர்நேனோ துகள்களின் ஆற்றல் வாய்ந்த உயிர் மருத்துவ பயன்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறார்.
2019, 2020, 2021, 2022, 2023ம் ஆண்டுகளில் வெளியான உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலிலும் இவர்கள் இடம் பெற்றிருந்தனர். தொடர்ந்து 6வது முறையாக தேர்வாகியுள்ள காந்திகிராம பல்கலை விஞ்ஞானிகளுக்கு துணைவேந்தர் பஞ்சநதம், பொறுப்பு பதிவாளர் சுந்தரமாரி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.