Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ வீடு கதவுகளை உடைத்து கொள்ளை

வீடு கதவுகளை உடைத்து கொள்ளை

வீடு கதவுகளை உடைத்து கொள்ளை

வீடு கதவுகளை உடைத்து கொள்ளை

ADDED : செப் 24, 2025 02:43 AM


Google News
எரியோடு:திண்டுக்கல் மாவட்டம் எரியோடு நல்லமனார்கோட்டையில் ஒரே இரவில் 2 வீட்டு கதவுகளை உடைத்து பணம் கொள்ளையடித்து மூதாட்டியை தாக்கியும், மேலும் 3 வீடுகளில் கொள்ளையடிக்க முயற்சித்த சம்பவத்தில் 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.

நல்லமனார்கோட்டையில் செப்.19 இரவு புகுந்த இருவர் 5 வீடு கதவுகளை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுப்பட்ட னர். மர வியாபாரி சுப்பாபிள்ளை மனைவி செல்லம்மாள் 60, தலையில் தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார். மகளிர் சுய உதவி குழு தலைவி வெள்ளையம்மாள் வீட்டின் கதவை உடைத்து ரூ. 9 ஆயிரத்தை கொள்ளையடித்தனர். விழித்து எழுந்த வெள்ளையம்மாள் தான் இருந்த அறை கதவை திறக்காமல் போன் மூலம் தனது அண்ணனுக்கு தகவல் தெரிவித்து உடனே வாருங்கள் என்று சத்தமாக கூற கொள்ளையர்கள் தப்பினர்.

இதே கிராமத்தில் சரவணன், கிருஷ்ணன், பாலசுப்பிரமணி வீடு கதவுகளையும் உடைக்க முயற்சித்தனர். கிராம மக்கள் அச்சமடைந்த நிலையில் மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த எரியோடு பகுதியில் போலீசார் துப்பாக்கியுடன் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

இதனிடையே கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு எரியோடு போலீசார் நடத்திய விசாரணையில் வேடசந்துார் அருகே தோப்புபட்டி, முதலியார்பட்டி கிராமங்களை சேர்ந்த 17 வயது சிறுவர்கள் இருவரை கைது செய்தனர். இவர்கள் மீது ஏற்கனவே இது போன்ற குற்ற வழக்குகள் உள்ளது குறிப்பிடதக்கது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us