ADDED : ஜூன் 15, 2024 06:34 AM
இடையகோட்டை : சின்னக்காம்பட்டி ராகவநாயக்கன்பட்டி வடக்கு தோட்டத்தைச் சேர்ந்தவர் சுமதி 40.
நேற்று முன்தினம் இரவு 6:55 மணிக்கு தாயாருடன் டூவீலரில் சின்னக்காம்பட்டி - கள்ளிமந்தையம் ரோட்டில் சென்றார். சி.புதுார் அருகே சென்ற போது பின்னால் டூவீலரில் வந்த 25 வயது கொண்ட இருவர் சுமதியின் கழுத்தில் இருந்த 4 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினர். இடையகோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.