ADDED : டிச 03, 2025 07:38 AM
நம்பியூர்:நம்பியூர்
அருகே மலையப்பாளையம் உதயகிரி முத்து வேலாயுத சுவாமி கோவிலில், உலக
நன்மைக்காக, 108 சங்காபிஷேகம் நடந்தது.
ஆலய அர்ச்சகர் பிரவீன்குமார்
குருக்கள் நடத்தி வைத்தார். இதை தொடர்ந்து முருகருக்கு சிறப்பு அபிஷேகம்,
அலங்காரம் செய்து பூஜை நடந்தது. இதில், 1,000க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து
கொண்டனர்.


