ADDED : ஜூன் 12, 2025 01:28 AM
கோபி,கோபி அருகே மகள் மாயமானதாக, போலீசில் தந்தை புகாரளித்துள்ளார்.
கோபி அருகே சமத்துவபுரத்தை சேர்ந்தவர் பிரேமா, 21. இவரை கடந்த, 6ம் தேதி முதல் காணவில்லை. அவரின் மொபைல்போனுக்கு பெற்றோர் தொடர்பு கொண்டபோது, சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அக்கம்பக்கம், உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தந்தை பழனிசாமி, 50, கொடுத்த புகார்படி, கடத்துார் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.