சென்னிமலை அருகே 150 மரக்கன்று நடவு
சென்னிமலை அருகே 150 மரக்கன்று நடவு
சென்னிமலை அருகே 150 மரக்கன்று நடவு
ADDED : அக் 09, 2025 12:56 AM
சென்னிமலை, சென்னிமலை யூனியன், ஓட்டப்பாறை ஊராட்சி, பெருந்துறை மெயின் ரோடு, அப்பாத்தா கோவில் அருகே இருந்த குப்பை மேட்டை அகற்றி, ஓட்டப்பாறை ஊராட்சி நிர்வாகம், சிறகுகள் அமைப்பு இணைந்து நேற்று, 150 மரக்கன்றுகளை நடவு செய்து அடர் வனம் ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஊராட்சி செயலாளர் பழனிசாமி, சிறகுகள் அமைப்பு சென்னிமலை பொறுப்பாளர் சரண்யா சந்துரு, ஓட்டப்பாறை ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் மன்னர் மண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்


